பெற்றோர்கள் பிள்ளைகள் கவனத்திற்கு

டீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கும்,டீன் ஏஜ் வயது குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கும் 
மனித மனங்களில் இடம் பிடித்து,அந்த நட்பினை ஆயுள் முழுக்க பராமரிக்கவெண்டும்  அதற்க்கு உயரியபன்புவேண்டும்   அது நம்மில் அனைவருக்கும் உண்டு முயர்சி செய்தால்  முடியாதது ஒன்றுமில்லை
இந்த உலகத்தை,மனிதர்களைப் பற்றி மிகவும் குறுகிய காலத்தில் புரிந்து கொள்ள வேண்டுமா? 
நமது பாரத தேசத்தில் ஒரு மனிதனது உண்மையான சொத்து என்பது அவரு/ளுடைய முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் வீடு,நகைகள்,சேமிப்புப் பத்திரங்கள்,தோட்டம் போன்றவை அல்ல;நம்பிக்கையும்,விசுவாசமும் மிக்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கும் நண்பர்கள்/நண்பிகளே!மனித மனங்களில் இடம் பிடித்து,அந்த நட்பினை ஆயுள் முழுக்க பராமரிக்கும் லாவகமே! 
அம்மா,அப்பாச செல்லங்களாகவோ இருக்கிறார்கள்;இந்த நிலையை மாற்றி தனது வேலைகளை தாமாகவே செய்யப் பழகுவதற்கும்,எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்வதற்கும்,மாறி வரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்வதற்கும் முன்வரவேண்டும் 
நமது கல்விக்கு நமது ஐந்தாம் வயது முதல் 10 முதல் 16 ஆண்டுகள் வரை ஒதுக்குகிறோம்;நாம் விரும்பும் படிப்பில் சேர்ப்பதோடும்,உரிய கட்டணங்கள் செலுத்துவதோடும் நமது பெற்றோர்களின் கடமை முடிந்துவிட்டது;ஆனால்,அந்த படிப்பில் அதிகமான கிரேடு வாங்க நாம் தான் படிக்க வேண்டும்;(பெற்றோர்கள் கவனத்திற்கு ) கட்டணங்கள் செலுத்துவதோடு நின்ருவிடதிர்கள் தினமும் உங்கள் குழந்த்தைகளுக்காக  குறைந்தபச்சம் ஒர்மநிநேரமாவது செலவிடுங்கள் அவர்களது குறைகள் என்னஎன்பதை உங்கலால் மட்டு மேகண்டறியமுடியும் உங்கள் குழந்த்தைகளுக்கு தோள்கொடுக்கும் தோழனாக தோழியாக பழகவேண்டும்
எனது பெற்றோர்கள் எனக்காக வாழ்ந்தவர்கள் அவ்ர்களைவணங்கி இதை இங்கு எழுதுகிறேன் நன்றி வணக்கம் அன்புடன் அருனைசாமி  
1.உங்களுக்கென்று இருக்கும் கொள்கைகளைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.
2.உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் உலகம்;அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
3.உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றித் தெரியாவிடில்,உடனே தெரியாது என்று உரியவர்களிடம் ஒப்புக்கொள்ளுங்கள்.அதே சமயம்,அதைப் பற்றி அறிந்து கொள்வது ஒன்றும் அவமானகரமான செயல் அல்ல;
4.எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு;அதற்காக அவர்களை வெறுக்க வேண்டாம்.
5.நீங்கள் ஒரு தவறு செய்து அதை மற்றவர்கள் கண்டுபிடித்து உங்களிடமே சொன்னால்,தயங்காமல் அந்தத் தவற்றை ஒப்புக் கொள்ளுங்கள்;
6.மற்றவர்களின் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.இதனால் அவர்களுக்கு உங்களை பிடித்துப்போகும்;
7.கோபப்படும் போதோ அல்லது குழப்பமான மனநிலையில் இருக்கும் போதோ செல்போனில் சம்பந்தப்படுபவர்களிடம் தொடர்பு கொள்ளாதீர்கள்.குறுந்தகவலும் அனுப்ப வேண்டாம்.
8.பணம்,நேரம்,பேச்சு இவைகளை அளவோடும்,தேவைப்படும் போதும் மட்டும் செலவிடப்பழகிக் கொள்ளுங்கள்.இந்த கருத்தை முறையாகப் பின்பற்றினால் அடுத்த பத்தாண்டுகளில் உங்கள் துறையில் நீங்கள் தான் முன்னோடியாகத் திகழுவீர்கள்.
9.ஒருவருடைய குறையை எப்போதும் எவரிடமும் கூறாதீர்கள்.உங்களைப் பற்றி யாராவது குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
10.எப்போதும் சுருக்கமாகப்பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.
11.மனதைச் சலனப்படுத்தும்,கிளுகிளுப்புக்குள்ளாக்கும்,போதைக்குள்ளாக்கும் எந்த விஷயத்திற்கும் ஒரு போதும்,ஒரு தடவைகூட இடம் தராதீர்கள்.ஆரம்பத்தில் மன மகிழ்வூட்டுவதாகவும்,போகப் போக உங்கள் உடல் ஆரோக்கியத்தை அந்த ‘கிளுகிளுப்பு’ சீர்குலைத்துவிடும்;உங்கள் நினைவுத்திறனை அழித்துவிடும்;நோயாளியாக்கிவிடும்; போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் உங்கள் இடத்தை தக்க வைக்க முடியாமல் போய்விடும்.
12.இணையம்,செல்போன்,முகநூல்,டுவிட்டர் போன்றவை தகவல் தொழில்நுட்ப சாதனைகளின் உச்சம் தான்! ஆனால்,நேரடியாக சந்தித்து பேசி,பழகுவதைப் போல சிறந்த அணுகுகுறை(behaviour)யைப்போல வேறு எதுவும் இந்த உலகில் எந்த நூற்றாண்டிலும் தோன்றப்போவது கிடையாது.நேரடியாகப்பேசி,பழகுவதன் மூலமாகவே ஒரு சிறந்த நட்பையோ,வாழ்க்கைத்துணையையோ மதிப்பிட முடியும்.
13.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டுவிடவேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.
14.பிற மனிதர்கள் பேசும் போது உன்னிப்பாக கவனிக்கப்பழகிக்கொள்ளுங்கள்.
15.பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்;அதே போல பிறர் உங்களுடைய நேரத்தை வீணடிக்க அனுமதிக்காதீர்கள்.
16.ஒருவருக்கு ஒரு உதவியைச் செய்வதில் சிறிது சந்தேகம் இருந்தாலும்,அதைச் செய்ய ஒப்புக் கொள்ளாதீர்கள்.
17.முடிவு செய்தல்,செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் (உங்களிடம் பணிபுரிபவர்களுக்கு) முழுச்சுதந்திரம் கொடுங்கள்.
18.ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்;போலியான பாராட்டுக்களை ‘அள்ளி’விட வேண்டாம்.
19.தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள். மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.
20.உங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நமது பாரத தேசம் வல்லரசாக நாம் செய்ய வேண்டியது என்ன? நமது வேலை/தொழிலை அக்கறையோடும்,நேர்மையாகவும் பார்ப்பது மட்டுமே!