Sagittarius -Tanucu-தனுசு-

 குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016
  • துலாம் - விருச்சிகம் - தனுசு - மகரம் - கும்பம் - மீனம் 

  • குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016
    னுசு 
    மூலம், புராடம், உத்திராடம் 1ம் பாதம்
     தன்மானமும் தன்னம்பிக்கையும் ஆன்மீக ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
     ராசிக்கு 4ல் கேது, 6ல் சந்திரன், 7ல் சூரியன், புதன் செவ்வாய், 9ல் சுக்கிரன், குரு, 10ல் ராகு, 12ல் சனிபகவானும் கிரக நிலைகளாக உள்ளது. குருபகவானின் சாரநாதன் கேது 4லிருப்பது நலம். வேதனைகள் விழும். வெற்றிகள் தொற்றிவரும். தட்டிக் கழித்தவர்கள் கிட்டே வருவார்கள். வீடு, வாகனம், சொந்தம்பந்தம் நிறைவைத் தந்து மனதை குளிர வைக்கும். வாழ்வில் ஒளிவீசும். இவ்வளவு நல்லதைச் சொல்லும் போது 7 ½ சனிச் என்ன செய்வார். 2க்கும் 3க்கும் உரிய சனி பகவான் பக்கத்து வீட்டுகாரர் கெடுபலனை குறைபார். அவர் சொந்த சாரத்தில் இருப்பது நன்மைதான்.
         சிலருக்கு சகோதரர்கள் வகையில் சிக்கல், சிறு சிறு பொருள் செலவு உண்டு. அம்சத்தில் சனியை குருபார்ப்பது காரியங்கள் சித்தியாகும். கடவுளே கதி என்று இருப்போர்க்கு, இறையருள், ஞானமும் இன்பமும் இனிக்கும். வருமானம் வந்துவிடும். செலவும் வந்து போகும். அதற்கு கடவுகளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்./ தடைப்பட்ட திருமணங்களும், மையலில் வயப்படும் காதல் திருமணமும் நடக்கும். நடக்க வேண்டிய தன்னிகரில்லா எண்ணி மலைத்து போக வேண்டும். தன்னிகரில்லா தலைவனுக்கு ஆனந்த கூத்தனுக்கு தொண்டு செய்து மீளுங்கள். பிறர் நலம் சிறக்கச் செய்யும். உழைத்திட கனிவான சனிபகவான் கருணை உங்களை உய்விக்கும்.
         1க்கும், 4க்கும் உடைய குருபகவான் 9லிருப்பது பன்னலத்துக் குறைவில்லை. பலருக்கு தெரியாத நீங்கள் வெளிச்சத்துக்கு வருவீர்கள். பெருமிதம் அடையலாம். கோயில் அறக்கட்டளை நடத்துவோர்கள் அரசியல்வாதி நலம் பெறுவார். உங்கள் குழந்தைகள் நலம் பெறுவார்கள். அவர்களின் தொழில், வீடு, வாகனம், சுற்றம், சூழல் மேன்மை பெறும். சிலர்க்கு தங்களின் மைந்தர்களுக்கு வீடு, வாகனம் அமைத்து கொடுத்து பேரன், பேத்தி பிறக்கவும், வளர்ந்த அவர்களுக்கு திருமணம் உயர்கல்வி, வாழ்க்கை உயர்வும் உண்டாகும்.
         தெய்வீகத் திருத்தலச் சுற்றுலாக்கள் சென்று வரவும். செலவுகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வப்போது குலதெய்வ கோயில் சென்று வருவதை மறக்க வேண்டாம். இதுவரை வீடு, ஒரு மாடி என்றிலிருந்து 2ம் மாடி, 3ம் மாடி என உயர கட்டிடங்கள் கட்டி ஆனந்தம் கொள்வீர்கள். சிலர் மனைவி, குழந்தைகள் சேர்ந்து வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை நடக்கும்.          
         13/12/2015ல் ராசியில் புதன், சந்திரன், 4ல் கேது 9ல் குரு, 10ல் செவ்வாய், ராகு, 11ல் சுக்கிரன், சூரியன், சனி என்னும்படி கிரக நிலைகள் உள்ளன. மூத்த, இளைய சகோதரர்களாய் கூட்டுத் தொழில் முனைவது தொலை தொடர்புகளால் அனுகூலம் உல்லாச பயணங்கள், தெய்வ வழிபாடுகளில் நாட்டம், மனைவியின் உடல்நலம், கவனிக்கவும், அம்சத்தில் வாக்கு 2ல் ராகுவும் 8ல் கேதுவும் இருப்பது உணவிலும் பேச்சிலும் நிதானம் வேண்டும். 13/04/2016ல் ராசிக்கு 4ல் சூரியன், சுக்கிரன், 3ல் கேது, 5ல் புதன், 7ல் சந்திரன், 9ல் குரு, ராகு, 12ல் செவ்வாய், சனி எனும் கிரக நிகழ்வுகளாக உள்ளன.
          செவ்வாய், ராகு சூரியதசை நடப்பிலிருந்தால், பல நலன்கள் விளையும். குருபகவான் சுக்ரன் காலில் நிற்பதும் சுக்கிரன் 4ல் உச்சம் பெற்று இருப்பதும், ஆஹா அற்புதமான நிலையாம், சத்ருக்கள் பங்காளிகள் பிரச்சனைகள் அகலும். மாணவர்கள் மேற்கல்வி தொடர்தல், தந்தை, தாய்நலம் சிறப்பு பெறும். தாய்வழி சொத்துக்கள், வாகனப் பெருக்கம், வீடு கட்டுதல், ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்கும் யோகம் நூதனப் பொருள் சேர்க்கை, தான் செய்யும் தொழிலில் தனக்கென பாணியை அமைத்து அதில் முத்திரையும் பதிக்கலாம். நித்திரை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். அம்சத்திலுள்ள ராகு, செவ்வாய், சுக்கிரன் சந்தேகங்களையும் கவலையும் உண்டு பண்ணி விடுவதற்கு ஏற்றதாக உள்ளது.
          எனவே முருகனையும் துர்க்கை அம்மனையும் வழிபட நல்லது நடக்கும். சூழும் மைந்தர்களை பிரிய நேரும். அவர்கள் கணவன் மனைவி ஒற்றுமை தேவை. புத்ரப்பேறு வேண்டும் தம்பதிகள், தக்க மருத்துவரை தேர்வு செய்து அதற்கான உபாயம் தேட குழந்தை செல்வம் கிடைக்கும். இது காலம் சனிபகவான் புதன் சாரம் பெற்று இருப்பது தொழில் விருத்தியும் மேற்பதவிகளும் மனைவி வகை உதவிகளும் வந்து சேரும். ஆட்களை ஏவி வேலைகள் செய்யும்நீங்கள், இனியதை குறைந்தது உங்களுக்கென சில வேலைகளை ஒதுக்கி செய்து கொள்ள வேண்டும். இதனால் வரும் தடை விலகி நிலைமை சீர்பெறும். அம்சத்திலுள்ள கிரகநிலைகள் 12லும், 6லும் நிற்பது சரியில்லை. எனவே கணவன் மனைவி உடல்நிலைகள் கவனிக்க வேண்டும்.   
            மனம் குழம்பாமல் தொட்ட காரியங்களை கிட்ட நின்று கவனித்து வெற்றிகளியை பெறுங்கள். பணிந்து போக கனியும் நற்செயல் மனைவிக்குத் தொழில் விருத்தி உத்தியோக உயர்வுகள் உண்டு. உங்கள் பத்திரிகை, சின்னதிரை, சினிமா, அழகுப்பொருள் விற்பனை போன்ற துறையிலிருந்தால் அது அவர்களுக்கு நலம் தரும். குழந்தை நலனில் அக்கறை தேவை. பிறந்த இட விரோதங்களைத் தேடிக் கொள்ள வேண்டாம் கவனம். மனைவியின் உடன் பிறந்த சகோதர்களால் அனுகூலம் உண்டு. தேடும் பணத்தை ஓடிவிடாமல் தவிர்க்க சேமிப்பு மேற்கொள்ளுங்கள். கப்பல், விமானம், இராணுவப் பணியாளர்க்கு எல்லாம் இடம் மாற்றம் உண்டாகும். அதற்கு தக்கபடி நடக்க சிக்கல் வராது. தந்தையின் தொழில்களுக்கு முடக்கம் ஏற்படும்.
          மகாலெட்சுமி பூஜை, சிவ பூஜை செய்ய நலம் பயக்கும். விரோதிகளும் கடன் தொல்லைகளும் அடங்கிப் போகும். கட்டிடத் தொழில், விவசாயம், மருத்துவத் தொழில், வங்கித் தொழில், ஆசிரியர்கள் தங்கள் பணிகளை சிரத்தையுடன் நடத்திக் கொள்ள நன்மைகள் உண்டாகும். தந்தை வழி சொத்துக்களும், அரசு பணியாளர்களுக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். உங்களின் சொத்துக்கள் மேல் கடன் வாங்குவதும், கடன் வாங்குவதால் உடல்நலம் சிறப்பு பெறும். இது காலம் கடன் இருந்தால் உடல் தொந்தரவு குறைந்து ஒரு அளவு நிம்மதி கிடைக்கும். அதை அனுபவத்தில் உணர்ந்து கொள்வீர்கள்.
           வெளிநாட்டுப் பணி, பயணங்களுக்குத் தேவையான ஆவணங்களை சரியாக அமைத்து வைத்துக் கொள்ளுங்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்யோக மேன்மை வீடு கட்டும் யோகமுண்டு. உறவினர்கள் உடனிருந்து உங்களிடம் வாங்கித் தின்று உங்களை சங்கடங்களுக்கு ஆளாக்குவார்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக நடக்க முனைவீர்கள். நடக்கும் மாமூலான வேலைகளை மட்டும் செய்யுங்கள். இதனால் பெயரும், புகழும், வெற்றியும், மக்களால் சில பல நன்மைகளும் குலதெய்வ இஷ்ட தெய்வங்களின் அருள் கிடைக்கும்.
    பரிகாரம்
    திருசெந்தூர் முருகனையும் ,குரு பகவானையும் வணங்கி வாருங்கள் நன்மை கிடைக்கும் . குலதெய்வைத்தையும் , குருபகவானையும் நனைத்து காரியம் தொடங்குகள் .  
    வாழ்க வளமுடன்